கத்திமுனையில் பாலியல் தொல்லை..! - நம்பி சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

சென்னையில், கேட்டரிங் வேலை தருவதாகக் கூறி, கல்லூரி மாணவனை விடுதிக்கு அழைத்துச் சென்று, கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 18 வயது இளைஞர், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவன் விடுமுறை நாட்களில் பகுதி நேரமாக கேட்ரிங் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கேட்டரிங் பணியின்போது சத்தியகுமார் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது சத்தியகுமார் மாணவனை தன்னிடம் வேலைக்கு வருமாறு அழைத்ததுடன், அவரது செல்போன் எண்ணை வாங்கிச் சென்றுள்ளார். மாணவனை தொடர்பு கொண்ட சத்தியகுமார், கேட்ரிங் வேலை ஒன்று வந்துள்ளதாகவும், பெரியமேடு பகுதிக்கு வருமாறு அழைத்ததன் பேரில் இளைஞர் அங்கு சென்றுள்ளார். அப்போது, சத்தியகுமார், மாணவனை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துவிட்டு தப்பிச் சென்றார். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி உதவியுடன், அந்த நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்