6 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை - தாத்தாக்கள் இருவர் கைது | kanchipuram | thanthi tv

x

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாத்தாக்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வசித்து வந்த தம்பதியினர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று வேறு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் 6 வயது பெண் குழந்தையை, சிறுமியின் தந்தை வழி தாத்தா பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் கதாத்தாவும் அவரது சகோதரரும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த நபர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்