"பாலியல் துன்புறுத்தல்" - விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்

x

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளர் ஆர்.விக்ரமன், காதல் என்ற போர்வையில், பாலியல் சுரண்டல் மற்றும் பண மோசடி செய்ததாக பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான விக்ரமன் மீது, இளம்பெண் வழக்கறிஞர் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், விக்ரமன் தன்னை காதலிப்பதாகக் கூறி நடித்து, தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியதுடன், பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுடன், தற்போது வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி என்பதால், அக்கட்சியின் மேலிடத்தில் புகார் அளித்தபோது, தன்னிடம் வாங்கிய 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில், 12 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்த நிலையில், ஆனால் கட்சி சார்பில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். எனவே, போலீசார் தலையிட்டு விக்ரமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் வழக்கறிஞர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்