ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. - சென்னையில் பயங்கரம்...

x

சென்னை பெருங்குடியில் ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்து, வடமாநில பெண்ணை மீட்டனர். கோதண்டராமர் தெருவில் செயல்பட்டு வரும் ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து அதிரடியாக சோதனை நடத்திய போலீசார், பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரதீப் என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த வட மாநிலப் பெண் ஒருவரை மீட்ட போலீசார், அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்