"பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி | Ramanathapuram

x

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாற்றுத்திறனாளி ஒருவர் தன் மீது டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அந்நபர் தனக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் வசிப்பதற்கு வீடு கேட்டு பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்ததாகவும், ஆனால் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்