லாரி டியூப்பில் பல லிட்டர் கள்ளச்சாராயம்... மண் தரையில் ஊற்றி அழித்த போலீசார்

x

மரக்காணம் மற்றும் மதுராந்தகத்தில் விஷச்சாரயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கள்ளச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் மாவட்டம் அனைக்கட்டை அடுத்து உள்ள மலையடிவாரத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.இதில் 17 லாரி ட்யூப்களில் சுமார் 500 லிட்டர் கள்ளச்சாரயத்தை பதுக்கி வைத்திருந்தை போலீசார் பறிமுதல் செய்து, மண் தரையில் ஊற்றி அழித்தனர். இது தொடர்பாக தலைமறைவாக இருந்த கள்ளச்சாரய வியாபாரி ராஜாமணியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 5 க்கும் மேற்ப்பட்ட கள்ளச்சாரய வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்