"ரயிலில் பயணிகள் மீது தீ வைத்தது தீவிரவாத செயல்".. பரபரப்பை கிளப்பிய போலீஸ்

x

கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீதான தாக்குதல் சம்பவம் பயங்கரவாத செயல் என நீதிமன்றத்தில் போலீசார் வாதிட்டுள்ளனர். எலத்தூரில் கடந்த 2ஆம் தேதி இரவு, ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் ஷாருக் சைஃபி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கேட்டு, அரசின் சட்ட உதவி மையம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த‌து. இந்த மனு விசாரணைக்கு வந்த‌ போது, ரயில் பயணிகள் மீது தாக்குதல் தொடுத்த சம்பவம் பயங்கரவாத செயல் என்பதால், உபா சட்டத்தின் பிரிவும் சேர்க்கப்பட்டதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டனர். இதையேற்ற நீதிமன்றம், ஷாருக் சைய்பியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த‌து.


Next Story

மேலும் செய்திகள்