இரும்பு கேட் உடைக்கப்படாத நிலையில்.. 7 அடி அம்மன் சிலைக்கு தீ வைத்த நபர்கள் -திருவள்ளூரில் அதிர்ச்சி

x

இரும்பு கேட் உடைக்கப்படாத நிலையில்.. 7 அடி அம்மன் சிலைக்கு தீ வைத்த நபர்கள் - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

திருவள்ளூர் அருகே கோயிலில் அம்மன் சிலை தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிவராகபுரம் கிராமத்தில் நிம்மாளி அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் இரும்பு கேட் போட்டு பூட்டப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள், அங்கிருந்த 7அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை தீவைத்து எரித்துள்ளனர். இதில் சிலை முழுவதும் எரிந்து சாம்பலானது. கோயில் இரும்பு கேட் உடைக்கப்பாடத நிலையில், அம்மன் சிலை எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகி புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்