"சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கென தனி தனி குடியிருப்பு" - மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் சலசலப்பு

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனித்தனியே வசதிகள் கோரிய நபரால் சலசலப்பு ஏற்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள அண்ணாமலை மன்றத்தில், அம்ருத் திட்டத்தின் கீழ் ஜார்ஜ் டவுன் மறுவளர்ச்சி திட்டம் தொடர்பான மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஒரு நபர், ஜார்ஜ் டவுனில் மேம்படுத்தும் பணிகளில் சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கென பிரித்து குடியிருப்புகள் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

X

Thanthi TV
www.thanthitv.com