சென்னை மெரினாவில் பரபரப்பு சம்பவம்.. | பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் வெட்டிய பயங்கரம்

x

மெரினாவில் காலை 6 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை கத்தி அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞ்சிறார்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

நண்பரின் திருமணத்திற்காக போட்டோ சூட் எடுக்க வந்தபோது மெரினாவில் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது என போலீஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 6 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் வெட்டிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்று இளம் சிறார்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வியாசர்பாடி சேர்ந்த இளமாறன் என்பவர் போட்டோகிராபராக ப ணி செய்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக ஆறு நபர்களுடன் போட்டோ சூட் எடுப்பதற்காக மெரினா கடற்கரைக்கு வந்திருக்கிறார்.

மெரினா கடற்கரையில் நம்ம சென்னை பகுதிக்கு பின்புறம் அமர்ந்திருந்த போது

ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தோல் என்கிற தோல் ஆனந்த என்பவர் இளமாறன் மற்றும் அவருடைய நண்பர்களிடம் தகராறு ஈடுபட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தோல் ஆனந்த் ஐந்து பேரை அழைத்துக் கொண்டு கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இளமாறனை துரத்தி வெட்டியதும், இளம்மாறன் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.

இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்து இரண்டு மணி நேரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தோல் என்கின்ற தோல் ஆனந்த் மற்றும் அவருடன் மூன்று இளம் சிறார்கள் என மொத்தமாக நான்கு பேரை கைது செய்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்