மனைவிக்கும் நண்பருக்கும் தகாத உறவு.. பேப்பரில் எழுதி காட்டிய கணவன்.. பரிதாபத்தின் உச்சம்

x
  • செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ்.
  • இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சசிகலா என்பவரும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
  • இதில், சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார்.
  • இந்நிலையில், செஞ்சி அருகேயுள்ள சங்கராபரணி ஆற்று பாலத்தில் சத்யராஜ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
  • இதையடுத்து, சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
  • இதில், சத்யராஜால் பேச இயலாத நிலையில், தனது இந்த நிலைக்கு காரணம் தனது மனைவியும், அவருடன் தகாத உறவில் இருந்த ஜான் என்பவர் தான் என பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார்.
  • இதையடுத்து, சத்யராஜின் மனைவி சசிகலா மற்றும் அவரின் ஆண் நண்பரான ஜெகனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்