ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைகிறார்களா? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைகிறார்களா? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
x


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. திமுக கூட்டணியைப் பொருத்தமட்டில், அவர்கள் வேட்பாளரை அறிவித்து தீவிர பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டனர். ஆனால் அதிமுக கூட்டணியில், ஈபிஎஸ் தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் தனித்தனியே வேட்பாளரைக் களமிறக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் இரு தரப்புமே ஆதரவு கேட்டுள்ளனர்.

இச்சூழலில், தமிழ்நாடு பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவின் இரு அணிகளும் சேர்ந்து இடைத்தேர்தலைச் சந்திக்கும் என கூறினார். இது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையனிடம் இதுதொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் சூசகமாகப் பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்