கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை? - பரவும் வீடியோவால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

x

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களுக்கு அதிகபட்ச விலையை விட கூடுதலாக ஐந்து ரூபாய் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது. ஜுப்ளி மார்க்கெட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில், 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில், 140 ரூபாய்க்கு விற்கப்படுவதாக, கூறப்படுகிறது. இது குறித்து மதுப்பிரியவர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, மூன்று நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்து விட்டதாக, கடை ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்