கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை..போலீசார் அதிரடி நடவடிக்கை..

x

சென்னை மற்றும் மும்பை ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பதை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலஜா ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்த போது, சிலர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்த‌து கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 7 வழக்குகளை பறிமுதல் செய்த போலீசார், 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 19 டிக்கெட்டுகள், 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்