"போராட்டம் இதைவிட பேரெழுச்சியாக நடைபெறும்" - சீமான் எச்சரிக்கை

x
  • நெய்வேலி என்எல்சிக்காக நிலங்களை வழங்கிய விவசாயிகள் அனைவருக்கும் சமமான இழப்பீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
  • நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்எல்சிக்காக ஏற்கனவே நிலங்களை வழங்கியவர்களுக்கு சமமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
  • புதிதாக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என குறிப்பிட்ட அவர், என்எல்சி நிறுவனம் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்தால் போராட்டம் இதைவிட பேரெழுச்சியாக நடைபெறும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்