திடீரென முளைத்த குட்டி ஈபிள் டவர்.. அதிசயித்துப் போன மக்கள்- ஏதேனும் மாயமா? மந்திரமா?

x
  • பாரிசில் திடீரென இரட்டை ஈபிள் கோபுரங்கள் முளைத்திருப்பதைக் கண்டு அப்பகுதி மக்களும் சுற்றுலாப்பயணிகளும் வியந்து போயினர்...
  • இது ஏதேனும் மந்திர தந்திரமா என அவர்கள் குழம்பிய நிலையில், பிறகு தான் தெரிந்தது அது பிரெஞ்சு கலைஞர் பிலிப் மைன்ட்ரொன்னின் கைவண்ணம் என்று...
  • 3 ஆயிரத்து 900 பெரிய மற்றும் 9 ஆயிரம் சிறிய உலோக துண்டுகளைக் கொண்டு இந்த குட்டி ஈபிள் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • உண்மையான ஈபிள் கோபுரத்தைப் போல பத்தில் ஒரு பங்கு அளவில் இந்த மாதிரி கோபுரம் உருவாக்கப்பட்டாலும், அது நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் நின்று பார்க்கும் போது இரண்டுமே ஒரே அளவில் இருப்பதைப் போன்ற பிம்பத்தை நமக்கு ஏற்படுத்துகிறது...

Next Story

மேலும் செய்திகள்