சுட்டெரித்த வெயில்... திடீரென புயலுடன் வெளுத்த மழை... பிடிங்கி எறியப்பட்ட செல்போன் டவர்

x

ராஜஸ்தான் மாநிலத்தில் புயலின் காரணமாக செல்போன் கோபுரம், கீழே சாய்ந்து விழுந்துள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென நாகாவூர் பகுதியில் புயல் காற்று வீசியது. அப்போது, ரியாசி என்னும் இடத்தில் செல்போன் கோபுரம் ஒன்று கீழே சாய்ந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினரும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் நிலைமையை ஆய்வு செய்து, இடிபாடுகளையும் அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்