இன்று பள்ளிகள் திறப்பு- கடும் போக்குவரத்து நெரிசல்.. ஸ்தம்பித்த சென்னை

x

கோடை விடுமுறையை ஒட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இன்று பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் மீண்டும் சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு - ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றதால், ஓட்டுநர்கள், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்