இப்படி ஒரு அரசு பள்ளி ஆசிரியரா...12 வருடம் நோ லீவ்.. முடியுமா? - "இவர் வரலாறும் ஒரு யுகம் பாடும்..!"

x

12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத அரசு பள்ளி ஆசிரியர் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்...

அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் தான் இந்த கீழ சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த கலையரசன்... இவர் கடந்த 12 ஆண்டுகளாக பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததில்லையாம்... காலை சரியாக 9 மணிக்கு பள்ளிக்கு வந்து மாணவர்களை ஒழுங்கு படுத்தி வகுப்பு துவங்குவதற்கு முன்பே அவர்களுக்கு ஏதாவது பாடம் சம்மந்தமாக கற்று தருவது ஆசிரியர் கலையரசனின் வழக்கம்... விடுமுறை நாட்களிலும் கூட அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள், திட்டங்களை முறையாக மாணவர்களுக்கு வழங்கி முன் நின்று அனைத்தையும் செய்து முடித்து விடுவார் கலையரசன்... 12 வருடங்களாக விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வரும் கலையரசன் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்