காந்தாரா திரைப்பட பாடலுக்கு காந்தாராவாக மாறிய அரசு பள்ளி மாணவர்கள்..ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

x

நீலகிரியில் நடைபெற்ற காய்கறி கண்காட்சியில் காந்தாரா திரைப்பட பாடலுக்கு அரசு பள்ளி மாணவர்கள் ஆடிய நடனம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2 நாட்கள் காய்கறி கண்காட்சிகள் நடத்தபட்ட நிலையில், ஏராளாமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், கோத்தகிரி, தேனாடு அரசு துவக்க பள்ளி மாணவர்கள் காந்தாரா திரைப்பட பாடலுக்கு நடனமாடியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த நிலையில், பயணிகள் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்