பள்ளி சீருடையில் பைக் திருடும் மாணவர்கள் - சிசிடிவி காட்சியை வைத்து போலீஸ் வலை

x
  • காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, பள்ளி சீருடை அணிந்தபடி மாணவர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
  • கிஷோர் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மாயமானது.
  • இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பள்ளி சீருடையில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
  • அதனைத் தொடர்ந்து, போலீசார் மாணவர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்