பரீட்சையை நிறுத்த வேலூர் மாவட்டத்தையே கதிகலங்கவிட்ட 9ஆம் வகுப்பு மாணவி.. பாட்டியையும் போலீசில் கோர்த்துவிட்ட சில்வண்டு

x
  • தேர்வுக்கு படிக்காததால் பாட்டியின் செல்போனில் இருந்து பள்ளிக்கு 9ம் வகுப்பு மாணவி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
  • வேலூர் மாவட்டம் கழிஞ்சூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து மிரட்டல் வந்துள்ளது.
  • இது குறித்து உடனடியாக வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது.
  • காவலர்கள் மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
  • அதில், அப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் புவியியல் தேர்வுக்கு படிக்காததால் தேர்வு பயத்தில் தனது பாட்டியின் கைபேசியை எடுத்து அவசர எண் 100க்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
  • வெடிகுண்டு இல்லை என்பதால் மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்