மீன் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி..உடனே கோட்டாட்சியர் போட்ட அதிரடி உத்தரவு

x

மயிலாடுதுறை அருகே மீன் குட்டையில் பள்ளி மாணவர் மூழ்கி உயிரிழ்ந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மீன் குட்டையை மூடும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், மேலையூரில் கடந்த மார்ச் மாதம் 17-ஆம் தேதி, அபினேஷ் என்ற 16 வயது பள்ளி மாணவர், வளர்ப்பு மீன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக மீன் குட்டையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, மாணவரின் குடும்பத்தினருக்கு 1 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பற்ற முறையில் இருந்த மீன் குட்டை, சீர்காழி கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்