பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவன் திடீர் உயிரிழப்பு

x

நாகை அருகே பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவன், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வலிவலத்திலுள்ள மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்தவர் கவிப்பிரியன்.

இவரும் இவரது வகுப்பு மாணவர்களும், பீட்டி பிரியடில் பள்ளி மைதானத்தை சுற்றி ஓடியுள்ளனர்.

அப்போது கவிப்பிரியன் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்