ஆதீனம் வசம் ஒப்படைக்கப்பட்ட பள்ளி... தருமை ஆதீனம் சொன்ன முக்கிய தகவல்

x

சீர்காழியில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் பள்ளி தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியை தொடர்ந்து நடத்திடும் வகையில், தருமபுரம் ஆதீனம் பரமாச்சாரிய சாமிகளிடம் நிர்வாகி ரீதியிலான ஆவணங்களை பள்ளி கல்வி குழுவினர் வழங்கினர். இதனையடுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக செயல்படவுள்ள இந்த பள்ளி, சிபிஎஸ்சி பாடத்திட்ட வகுப்புகளுடன் ஏழை, எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்கும் என தருமை ஆதீனம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்