"பள்ளி குழந்தைகளுக்கு 5 ரூபாய் மட்டுமே கட்டணம்" - தனியார் பேருந்து நிறுவனம் அறிவிப்பு

x

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்தநிலையில் கோவை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான 4 தனியார் பேருந்துகளில், பள்ளி குழந்தைகளுக்கு 5 ரூபாய் மட்டுமே கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் சீருடை அணிந்திருந்தால் போதும் எனவும், குறிப்பிட்ட பேருந்துகளில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் 5 ரூபாய் மட்டுமே கட்டணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி குழந்தைகளுக்கு இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்