ஓடிய பேருந்தின் Emergency Exit வழியாக வெளியே விழுந்த பள்ளி சிறுவன்

x

பொன்னேரியில் தனியார் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவர் அவசர கதவு வழியே கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு 1ஆம் வகுப்பு படிக்கும் யஸ்வந்த் என்ற மாணவர் பள்ளி முடிந்து வழக்கம் போல பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கோளூர் அருகே பள்ளி பேருந்து சென்ற போது, மாணவர் யஸ்வந்த், பள்ளி பேருந்தின் அவரச கதவு திறந்து அதன் வழியே கீழே விழுந்தார்.

இதில் சிறுவன் யஸ்வந்த்திற்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்