திருமணம் ஆகாதவர்களுக்கு உதவித்தொகை..குட் நியூஸ் சொன்ன முதல்வர்

x

ஹரியானாவில், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் மாதாந்திர உதவித்தொகை வழங்கவுள்ளதாக, முதலமைச்சர் மனோஹர் லால் கட்டார் அறிவித்துள்ளார்...

கர்னால் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் மனோஹர் லால் கட்டார் கலந்துக் கொண்டார். அப்போது, 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆகாத நபர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த திட்டம் குறித்து அரசு முடிவெடுக்கும் எனவும் அவர் அறிவித்தார். இதன்மூலம், தற்போது மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் திருமணம் ஆகாதவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சம் திருமணமாகாத நபர்கள் பயன்பெறவுள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்