நாளை ஊழல் பட்டியல்.. நேரம் குறித்த அண்ணாமலை

x
  • தமிழக அரசின் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அண்ணாமலை, ஏப்ரல் 14-ந் தேதி...
  • தமிழ் புத்தாண்டு தினத்தில் தி.மு.க.வை சேர்ந்த 27 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் தற்போதைய அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்தார்.
  • 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
  • அதன் பிறகு அரசியல் சூழல் பல மாற்றங்களை கண்டிருந்த நிலையில், சொன்னபடி அண்ணாமலை தனது பட்டியலை வெளியிடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
  • அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நாளை காலை 10.15 மணிக்கு திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
  • மேலும், அண்ணாமலை அணிந்துள்ள ராஃபேல் வாட்ச்சின் விலை... உள்ளிட்ட ஆதாரங்களையும் அவர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இதனால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்