விபத்தில் சிக்கிய தாய் மற்றும் சேய்க்கு ஹீரோவான எஸ்.பி | Nagapattinam Accident | SP

x

நாகப்பட்டினத்தில், விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். புத்தூர் ரவுண்டானா அருகே, ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கைக்குழந்தையுன் இருந்த பெண், முதலுதவி சிகிச்சை மேற்கொள்ள ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக காத்திருந்தார். அப்போது, அந்த வழியாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், விபத்தில் சிக்கியவருக்கு தண்ணீர் கொடுத்ததுடன், ஆம்புலன்ஸுக்காக காத்திருந்த பெண்ணை தனது கார் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்