சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு - மதுரை கோர்ட்டில் எய்ம்ஸ் மருத்துவர் சாட்சியம்

x


சாத்தான்குளம் தந்தை மகன்,கொலை வழக்கில், அரசு மருத்துவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என, எய்ம்ஸ் மருத்துவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்..

இது தொடர்பான வழக்கு பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எய்ம்ஸ் குழுவை சேர்ந்த டாக்டர் அரவிந்த்குமார் நீதிபதி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை, அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த அறிக்கையில், இருவரையும் போலீசார் லத்தி, உருளை போன்றவற்றால் தாக்கியுள்ளதாகவும், பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின்பு, அரசு மருத்துவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை, தாங்கள் உறுதிப்படுத்தியதாகவும் கூறினார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்....


Next Story

மேலும் செய்திகள்