சசிகலா பதவி பறிப்பை எதிர்த்த வழக்கு - விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

x

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவர் தாக்கல் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிப்பதா அல்லது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதா என்று வாதம் நடைபெற்றது.

பின்னர், தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்