TNPSC குரூப் 2 தேர்வு விவகாரம்.. தமிழக அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்

x
  • தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மை தேர்வுகளை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
  • இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சனிக்கிழமையன்று நடைப்பெற்ற குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, தேர்வு எழுதியவர்கள், மிகுந்த அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
  • . மேலும், பல்வேறு இடங்களில் தேர்வர்களுக்கு புகைப்படம் மற்றும் பதிவெண்ணுடன் கூடிய, ஓஎம்ஆர் விடைத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.
  • எனவே, இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்