ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை... தென்னந்தோப்பிற்குள் நடந்த பயங்கரம் - பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

x
  • தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
  • தேவிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், கடந்த நவம்பர் மாதம், அண்ணன் மகளை கேலி செய்தவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
  • அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டிச் சென்ற ஒரு மர்ம கும்பல், தென்னந்தோப்பிற்குள் வெட்டி சாய்த்து விட்டு தப்பியோடி விட்டது.
  • இதில், செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய உடலைக் கைப்பற்றி, சிவகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்