காவலர்களை தாக்கிய ராணுவ வீரர் கைது! நீதி கேட்டு ரகளை செய்த மிலிட்டரி மேன் - அதிரடி ஆக்சன் எடுத்த போலீசார்

x
  • சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம் கிராமத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராணுவ வீரர் முத்துப்பாண்டி உட்பட 4 பேர், மதுபோதையில் உணவகத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.
  • அப்போது அதனை தட்டிக் கேட்ட காவலர்களை தாக்கியதால், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமல்ராஜ் என்ற ராணுவ வீரர், பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டுள்ளார்.
  • அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்