"என்னல எனக்கு முடி வெட்ட மாட்டியா?" - கடை ஊழியர் கன்னத்தில் பளார் விட்ட நபர் | Nagercoil

x

கன்னியாகுமரி அருகே மதுபோதையில் வந்த ஒருவர் முடி திருத்தும் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முடி திருத்தும் கடைக்கு மதுபோதையில் வந்தவர்கள் அங்கு பணிபுரிந்து வரும் ஊழியரை கன்னத்தில் தாக்கியுள்ளனர். தனக்கும் முடி திருத்தம் செய்ய மாட்டாயா என கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ வெளியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்