ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த அவலம் - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

x
  • சேலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.
  • சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
  • இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார்.
  • இதில் ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.
  • மேலும், பெண்கள் சிலர் இணைந்து அடிப்படை வசதிகள் செய்து தருமாறுக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்தனர்.
  • இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்