சேலம் டூ ஸ்ரீவில்லிபுத்தூர்..பாஜக பிரமுகருக்கு வந்த 400 கிலோ பார்சல்.. - சிக்கிய டிரைவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்

x

ஸ்ரீவில்லிபுத்தூரில், 400 கிலோ குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஓட்டுநர் கண்ணன் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செங்கோட்டை நகராட்சியின் 24ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் செண்பகராஜன் என்பவருக்கு கொடுப்பதற்காக, சேலத்தில் இருந்து குட்கா பொருள் கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும், குற்றாலத்தில் சீசன் தொடங்கியதை அடுத்து, சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து விற்பனை செய்ய முயன்றதும் கண்டறிப்பட்டது. இதனிடையே, ஓட்டுநர் கண்ணனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்