திடீரென வந்த தலைசுற்றல்.. மயக்கம் - கால்வாயில் விழுந்த கர்ப்பிணி பரிதாபம் - நுரையீரலுக்குள் புகுந்த கழிவுநீர் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

x
  • சேலத்தில், கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • அம்மாபேட்டை அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி சந்தியா, 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
  • வீட்டின் முன்பாக உள்ள குப்பைகளை அகற்றும்போது வாந்தி ஏற்பட்டு, சாக்கடை கால்வாயில் வாந்தி எடுத்துள்ளார்.
  • அப்போது மயங்கி சாக்கடை கால்வாய்க்குள் சந்தியா விழுந்துள்ளார்.
  • இதில், சுவாசக்குழாய், நுரையீரலில் கழிவுநீர் புகுந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • சாக்கடை கால்வாயில் ஆழம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்புக்காக மேல் தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்