"கணவனை களவாடிய தோழி"... கண்ணீருடன் காவல் நிலையம் சென்ற மனைவி

x
  • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனது கணவரை தன்னுடன் படித்த தோழி கடத்திச் சென்று விட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • பாகல்பட்டி கிராமம் செங்கானூர் பகுதியில் மோகன்குமார் முனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
  • முனியம்மாளின் வீட்டிற்கு, அவரது தோழி கலையரசி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
  • அப்போது, மோகன்குமாருக்கும், கலையரசிக்கும் இடையே பழக்கம் ஏறபட்டுள்ளது.
  • இந்த நிலையில், கலையரசியும், மோகன்குமாரும் மாயமானதாக கூறப்படுகிறது. கணவரை எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி முனியம்மாள், தோழி கலையரசி தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார்.
  • இதனிடையே, தனது மனைவியை மோகன்குமார் கடத்திச் சென்று விட்டதாக, கலையரசியின் கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
  • புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார், மோகன்குமார் மற்றும் கலையரசியை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்