"உங்க அத்தனை பேரையும்.." மாணவிகளை கொடூரமாக தாக்கி, ஆபாசமாக திட்டிய தலைமை ஆசிரியை... பெற்றோர் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மாணவிகளை பிரம்பால் அடித்து, ஆபாசமாக திட்டிய பள்ளி தலைமை ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
x

ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் வசந்தகுமாரி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், வகுப்பில் கூச்சலிட்ட மாணவிகளை பிரம்பால் அடித்தும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. பிரம்பால் அடித்ததில் காயமடைந்த மாணவிகள் சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தலைமை ஆசிரியை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளியை முற்றுகையிட்டனர். போலீசார் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை வசந்தகுமாரி, பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்