தினத்தந்தி நாளிதழ் சார்பில் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி..நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சேலம் ஆட்சியர்

x

சேலத்தில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி சார்பில், வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை சேலம் ஆட்சியர் கார்மேகம், குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தர். தொடர்ந்து பேசிய தினத்தந்தி நாளிதழின் பொது மேலாளர் தனஞ்செயன், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவதால்தான், தினத்தந்தி இந்தியாவில் நம்பர் ஒன் நாளிதழாக இருக்கிறது என குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பேசிய சேலம் ஆட்சியர் கார்மேகம், மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய துறையில் படித்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்