"யார் சாமி இவன்" - பெட்ரோல் தீர்ந்ததால் ஆத்திரம்... பைக்குக்கு தீ வைத்த நபர்...

x
  • சேலத்தில், பெட்ரோல் தீர்ந்து போனதால் ஆத்திரமடைந்த நபர், இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கொண்டலாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், மது அருந்தி விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது, பெட்ரோல் தீர்ந்ததாக தெரிகிறது.
  • பலமுறை வாகனத்தை இயக்க முயற்சித்தும் பலனளிக்காததால், பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து வாகனத்துக்கு தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
  • இதையறிந்த பொதுமக்கள், உடனடியாக தீயை அணைத்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
  • இது தொடர்பாக, மணிகண்டனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்