சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது வேகமாக வந்த பைக் மோதி விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி சிறுவன் மீது, இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகே திண்டமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் சிறுவன், சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்