ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள்.. நிலத்தில் இறங்கி போராடிய விவசாயிகள் - சேலம் அருகே பரபரப்பு

x

சேலம் அருகே வங்கிக் கடனுக்காக நிலத்தை கையகப்படுத்த வந்த வங்கி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த மோகன் என்பவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை ஜெயராமன் என்பவர் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

அந்த நிலத்தின் பெயரில் மோகன், தனியார் வங்கியில் கடன் வாங்கியதாகவும், அந்த நிலத்தை வங்கி மூலம் வேறு ஒருவருக்கு எழுதிக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, அந்த நிலத்தை ஒப்படைக்குமாறு ஜெயராமனிடம் வங்கி நிர்வாகம் கடந்த 2 மாதங்களாக கூறிவந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று நேரில் வந்தும் வலியுறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயராமன் தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்