சேலம் பேக்கரியில் கெட்டுப்போன பால்கோவா..வெஜ் ரோலில் துருப்பிடித்த ஆணி-கஸ்டமர் ஷாக்..."ஆணி இருந்தது ஏத்துக்கவே முடியல"

x

சேலத்தில், பேக்கரி கடையில், கெட்டுப்போன பால்கோவா மற்றும் ஆணி கிடந்த வெஜ்ரோல் விற்பனை செய்யப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் மாநகர் நெத்திமேடு பகுதியில் இயங்கி வரும் பேக்கரி கடையில், சுரேஷ் என்ற வாடிக்கையாளர், ஜிலேபி, மிக்சர் மற்றும் பால்கோவா உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த குழந்தைகள் அதனை ஆசையாக எடுத்து ருசித்துக் கொண்டிருந்தபோது, பால்கோவா முழுவதும் கெட்டுப் போன நிலையில், துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து கேட்டபோது கடை ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடைக்கு வந்த மற்றொரு வாடிக்கையாளரான தீபக் சரவணன் என்பவர், வாங்கிச் சென்ற வெஜ்ரோலில் சுமார் 2 இன்ச் அளவில் துருப்பிடித்த ஆணி ஒன்று உள்ளதாக தெரிவித்தது, அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்