அரசு நிலங்கள் வீட்டு மனையாக விற்பனை, ரூ.150 கோடி அபேஸ்... முன்னாள் திமுக நிர்வாகி மீது பகீர் புகார்

x

விவசாய நிலங்களை சட்ட விரோத மனைப்பிரிவுகளாக விற்பனை செய்து, 150 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி அருகே மல்லியம்பத்து ஊராட்சில் கடந்த 2006 முதல் 2016 வரை ஊராட்சி தலைவராக இருந்த கதிர்வேல், தனது பதவி காலத்தில் ஊராட்சி எல்லைக்குட்பட்ட வாசன் வேலி, வாசன் சிட்டி, முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் 237 ஏக்கர் விளை நிலத்தை, சட்ட விரோதமாக மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் 150 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான விக்னேஸ்வரன் புகார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்