தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை... அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீசார்

x

நாகூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நாகூர் தர்காவை சுற்றிய பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பந்தப்பட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், முஜிபுர் ரஹ்மான், முருகன் மற்றும் ஜெய்லானி ஆகியோரை கைது செய்த போலீசார், சுமார் இரண்டரை லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒன்றரை லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை... அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்