"மருத்துவத்துறை - உலகளவில் இந்தியர்கள் முன்னணி" - ஜக்கி வாசுதேவ் பேச்சு

x
  • மருத்துவத்துறையில் இந்தியர்கள் உலக அளவில் முன்னணி வகிப்பதாக ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  • கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 20வது ஆண்டு மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
  • இதில், 2வது நாள் சிறப்பு கருத்தரங்க கூட்டத்தில் கலந்து கொண்ட ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், இந்திய மருத்துவர்கள் உலக அளவில் சிறந்து விளங்க காரணம் அவர்களின் நேர்மையும், கடமை தவறாத பணியும் ஆகும் என்று கூறினார்.
  • நவீன காலத்தில் மருத்துவத்துறையில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இது போன்ற கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்