தாய் உயிரையும் சேர்த்து காவு வாங்கிய மகனின் மரணம் - திருப்பதியில் நடந்த கோர சம்பவம்

x

ஆந்திராவில், மகனின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட மனவேதனையால், மாரடைப்பு ஏற்பட்டு, தாயும் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரகிரி அருகே உள்ள துங்காராம் கிராமத்தை சேர்ந்த சங்கர், திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பிய அவர் குளிக்க சென்றார். குளியலறை சுவரில் அவர் கைவைத்தவுடன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனின் திடீர் மரணத்தால், அழுது புலம்பி கொண்டு இருந்த அவருடைய தாய் செங்கம்மாவுக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு

அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செங்கம்மாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஒரே நாளில் ஒரே வீட்டில் ஏற்பட்ட இரண்டு மரணங்கள் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்